LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

சுற்றுச்சூழல் மாசு இல்லாத உலகின் முதல் அதிவேக ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் சோதனை ஓட்டம்!

சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாதவகையில் ஓடும் உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டது.

மின்சாரத்திலும், டீசலிலும் தற்போது ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சுற்றுச்சூழல் மாசுகளை குறைக்கும் வகையில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வழக்கமான ரயில்களைக் காட்டிலும் செலவு அதிகம் என்கிற போதிலும் எந்தவிதத்திலும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியாடாத ரயிலாக இருக்கும். இந்த ரெயிலை பிரான்ஸின் டிஜிவி அல்ஸ்டாம் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

மணிக்கு அதிகபட்சமாக 140கி.மீவேகத்தில் ரயிலை இயக்க முடியும். முதல்கட்டமாக வடக்கு ஜெர்மனியில் உள்ள கக்ஸாஹெவன், பிரிமெர்ஹெவன், பிரிமெர்வோர்டே, பக்ஸிடிஹூட் ஆகிய நகரங்களுக்கு இடையே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

உலகிலேயே முதல்முறையாகச் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஓட உள்ள இந்த ரயில் முழுவதும் ஹைட்ரஜன் சக்தியால் இயங்கக்கூடியது. இந்த ரயிலில் லித்தியம் மின்கலன்கல் அமைக்கப்பட்டு இருக்கும்.

ரயில் ஓடத் தொடங்கியவுடன் இந்த பேட்டரியில் இருக்கும் எரிபொருள் செல்கள், ஹைட்ரஜன் மூலக்கூறுகளுடன் இணைந்து வேதியியல் மாற்றத்தில் ஈடுபட்டு மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இதன் விளைவாக ரயிலில் இருந்து நீராவியும், சிறிய அளவிலான நீரும் வெளியேற்றப்படும். ஆனால் எந்தவிதத்திலும் கார்பன் டை ஆக்சைடு உருவாகாது.

"கொராடியா ஐலின்ட்" என்று இந்த ரயிலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒரு டேங்கர் ஹைட்ரஜன் மூலம் ஆயிரம் கி.மீ வரை ரயிலை இயக்க முடியுமாம். அதிகமான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால், அவை அனைத்தும் பேட்டரியில் சேமிக்கப்படும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற 14 ரயில்களைத் தயாரிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது. டீசல் ரயில் எஞ்சின்களை ஒப்பிடும் போது இந்த ரயில் மிகவும் விலை அதிகம் என்கிற போதிலும், பேட்டரிகளை ரீசார்ஜ் செய்வதன் மூலம் நீண்ட ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும், செலவும் டீசல் எஞ்சின்களோடு ஒப்பிடும்போது குறைவாகும்.

இதுகுறித்து ரயில் தயாரிப்பு நிறுவன அதிகாரி ஹென்ரி பாப்பார் லாபார்ஜ் கூறுகையில், "உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். 2021-ம் ஆண்டில் உலக அளவில், இந்த ரயில் பெரும் புரட்சியை செய்யும்" எனத் தெரிவித்தார்.

by Mani Bharathi   on 19 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கலா மஞ்சரி நிறுவனர் திருமதி சௌந்தர நாயகி வயிரவன் அவர்களின் ஆறாவது இசை மற்றும் ஒளிவட்டு வெளியீடு கலா மஞ்சரி நிறுவனர் திருமதி சௌந்தர நாயகி வயிரவன் அவர்களின் ஆறாவது இசை மற்றும் ஒளிவட்டு வெளியீடு
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று செயின்ட் லூயிஸ் மேனாள் தமிழ்சங்கத் தலைவர் விஜய் மணிவேல் தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றுள்ளனர் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று செயின்ட் லூயிஸ் மேனாள் தமிழ்சங்கத் தலைவர் விஜய் மணிவேல் தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றுள்ளனர்
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.