LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (60). பட்டறைத் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகள், 2 மகன்கள் உள்ளனர்.

 

வேளாண் கருவிகளான மண்வெட்டி, அரிவாள், களைக்கொத்து, கோடாரி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களான அரிவாள்மணை,தோசை சட்டி, பணியாரச் சட்டி போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் ஈஸ்வரன். இதற்காக ஊர் எல்லையில் பட்டறை அமைத்துள்ளார்.

 

தொடக்கத்தில் தான் தயாரித்த பொருட்களைப் பேருந்தில் கொண்டுசென்று, கிராமங்களில் விற்பனை செய்துவந்தார். பின்னர் 3 சக்கரச் சைக்கிளில் இவற்றைக் கொண்டு சென்று விற்பனை செய்தார். பலஊர்களுக்கும் செல்வது சிரமமாக இருந்ததால், மூன்று சக்கரச் சைக்கிளில் இரு சக்கர வாகனத்தின் இன்ஜினைப் பொருத்தி, அதைப் பயன்படுத்தத் தொடங்கினார். அதில் கிடைத்த அனுபவத்தால், சொந்தமாகச் சிறு ரக வாகனத்தைத் தயாரிக்கும் எண்ணம் இவருக்கு ஏற்பட்டது.

 

இதையடுத்து ‘மினி ஜீப்’ தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காகப் பழைய ஸ்டீல் கட்டில்களை வாங்கி தகடாக மாற்றி, மினி ஜீப்பின் சுற்றுப்புறப் பகுதியை உருவாக்கி உள்ளார். பின்னர், பழைய ஸ்கூட்டரின் இன்ஜினை தனியே எடுத்து, அதில் பொருத்தியுள்ளார். தொடர்ந்து, பழைய இரும்புக் கடையிலிருந்து ஸ்டியரிங், டயர் போன்றவற்றை ஒவ்வொன்றாக வாங்கி, மினி ஜீப்பை வடிவமைத்துள்ளார்.

 

இதுகுறித்து ஈஸ்வரன் கூறும்போது, “இந்த மினி ஜீப் லிட்டருக்கு 30 கி.மீ. தொலைவு செல்லும். சின்னமனூர் உள்ளிட்ட சிறு நகரங்களுக்கு இதில் செல்லும்போது பலரும் புகைப்படம் எடுத்துக் கொள்வதுடன்,சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்து வருகின்றனர். இந்த வண்டியை வடிவமைக்க ரூ.80 ஆயிரம் செலவாகி உள்ளது. 15 நாட்களில் செய்து முடித்தேன். ஸ்கூட்டர் இன்ஜின்என்பதால், இந்த மினி ஜீப்புக்குகியர் கிடையாது. ஆக்ஸிலேட்டர் மற்றும் பிரேக் மட்டும்தான் உள்ளது.இதில் 4 பேர் செல்லலாம். அல்லது250 கிலோ வரையிலான சுமைகளை இதில் ஏற்றிச் செல்லலாம்” என்றார்.

by Kumar   on 05 May 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.