தமிழ் திரையுலகில் முன்னி காமெடியனாக கலக்கி வந்த சந்தானம் சமீபத்தில் வெளியான வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார்.
இந்த படத்தின் ரிலீசுக்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த சந்தானம், என்னுடன் நடித்த ஹீரோக்களுக்கெல்லாம் நான்தான் பஞ்ச் டயலாக் கொடுத்தேன். சில நாட்களில் படப்பிடிப்பில் இருப்பவர்கள் அங்கிருந்தபடியே என்னிடம் பஞ்ச் டயலாக் என்ன பேச வேண்டும் என்று கேட்பார்கள். அதையடுத்து, நான் யோசித்து அவர்களுக்கு டயலாக் சொன்ன பிறகுதான் நடிப்பார்கள் என ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் விஷயத்தை போட்டு உடைத்தார்.
ஆனால், இப்படி ஹீரோக்களே என் தயவில்தான் பஞ்ச் டயலாக் பேசினார்கள் எனறு சந்தானம் ஓப்பனாக பேசியதால், அவருடன் நடித்த சில ஹீரோக்களின் திரைக்குப்பின்னால் நடப்பதை இப்படி மீடியாக்களிடம் போட்டு உடைத்து விட்டாரே என்று சந்தானத்தின் மீது கோபமாகி விட்டார்களாம். இருந்தாலும் ஒரு சிலர் அதை பொருட்டாகவே மதிக்கவில்லை....
|