|
||||||||
பாயிரம் |
||||||||
காப்புப் பாயிரம்
கொல்லமெண்ணூற் றெழுபத்தா றெனக்கணிதப்
பாவாணர் குறித்த வாண்டின்
மல்கியசீர் விக்கிரம வருடத்தா
வணிமூல வளஞ்சேர் நாளி
னெல்லைநகர் வடிவுகந்த வேய்முத்தைப்
பணிந்துலகி னெடுநா ணிற்கப்
பல்கலைதேர் வடமலைநன் னிகண்டினையீ
சுர கவிஞன் பகர்ந்திட்டானே.
பார்புகழ் திருநெல் வேலியம் பதிவா
ழைங்கரத் தொருகோட் டானையை வடிவேற்
சிங்கந் தன்னைச் சிறப்புட னீன்ற
பிடிவடி வுடைய பெண்கொடி பாகத்
தடிகள் செம்பொன் னடிகளை வணங்கி
ஒருபெய ரொருபொருள் உரைக்குங் காண்டமும்
ஒருபொருள் பலபெயர் ஓதுங் காண்டமும்
பலபெயர்க் கூட்டத் தொருபெயர்க் காண்டமும்
சொற்பொருட் காண்டத் தொகைமூன் றாக்கி
ஈட்டுபுகழ் இரையூர் வடமலை நிகண்டென
நாட்டினன் மடசை நன்னகர் வாழும்
சிதம்பர பாரதி சேய்தின முமையாள்
பதம்பணி யீசுர பாரதி தானே.
காப்புப் பாயிரம் முற்றும்.
கண்ணனுங் கண்ணனைக் காத்த நெல்வேலிக்
கண்ணனுஞ் செந்தமிழ்க் காப்பா குவரே.
திக்கன் புறுபெயர் நூல்செய்யவடி வாளுகந்த
நக்கன் புகழ்நெல்லை நாயக-முக்கண்ணிறை
சாரதிதா னெவவ்வுலகந் தந்தோன்செந் நாவினிற்சேர்
பாரதிதாள் வாழ்த்திநினைப் பாம்.
காப்புப் பாயிரம் கொல்லமெண்ணூற் றெழுபத்தா றெனக்கணிதப் பாவாணர் குறித்த வாண்டின் மல்கியசீர் விக்கிரம வருடத்தா வணிமூல வளஞ்சேர் நாளி னெல்லைநகர் வடிவுகந்த வேய்முத்தைப் பணிந்துலகி னெடுநா ணிற்கப் பல்கலைதேர் வடமலைநன் னிகண்டினையீ சுர கவிஞன் பகர்ந்திட்டானே.
பார்புகழ் திருநெல் வேலியம் பதிவா ழைங்கரத் தொருகோட் டானையை வடிவேற் சிங்கந் தன்னைச் சிறப்புட னீன்ற பிடிவடி வுடைய பெண்கொடி பாகத் தடிகள் செம்பொன் னடிகளை வணங்கி ஒருபெய ரொருபொருள் உரைக்குங் காண்டமும் ஒருபொருள் பலபெயர் ஓதுங் காண்டமும் பலபெயர்க் கூட்டத் தொருபெயர்க் காண்டமும் சொற்பொருட் காண்டத் தொகைமூன் றாக்கி ஈட்டுபுகழ் இரையூர் வடமலை நிகண்டென நாட்டினன் மடசை நன்னகர் வாழும் சிதம்பர பாரதி சேய்தின முமையாள் பதம்பணி யீசுர பாரதி தானே. காப்புப் பாயிரம் முற்றும்.
கண்ணனுங் கண்ணனைக் காத்த நெல்வேலிக் கண்ணனுஞ் செந்தமிழ்க் காப்பா குவரே.
திக்கன் புறுபெயர் நூல்செய்யவடி வாளுகந்த நக்கன் புகழ்நெல்லை நாயக-முக்கண்ணிறை சாரதிதா னெவவ்வுலகந் தந்தோன்செந் நாவினிற்சேர் பாரதிதாள் வாழ்த்திநினைப் பாம்.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|