ஊடல் செய்யின் இன்பம் உண்டாயினும், அதன் கண்ணும் ஒரு துன்பம் உண்டு: புணருங்கால் அது நீட்டிக்குங்கொல்லோ? நீட்டியாதோ? என்று ஐயுறுதலால்.
இது தலைமகள் ஆற்றாமை வாயிலாகப் புலக்கத் தலைமகன் அது கண்டு சொல்லியது.
நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்;
அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக
இருக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
நம்முடைய உருவத்தைத் திருப்பி எதிர் உருவாக நிழல் காட்டக்கூடிய தண்ணீர்தான் நல்ல தண்ணீர். அதைப்போல ஒருவருக்கொருவர் ஒத்த எதிர் விருப்பம் காட்டக்கூடிய காதலன் காதலியாகிய இருவருக்கிடையில்தான் நல்ல காம இன்பம் இருக்கும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
உயிர்க்கு இன்றியமையாத நீரும் நிழலினிடத்தே இனிதாகும். வெயிலில் இனிதாகாது. அதுபோலப் புணர்ச்சிக்கு இன்றியமையாத புலவியும் அன்புடையவரிடத்தில்தான் இனிதாகும்.
Translation
Water is pleasant in the cooling shade;
So coolness for a time with those we love
Explanation
Like water in the shade, dislike is delicious only in those who love