கேள்வியால் தோட்கப்படாத செவி - கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள்; கேட்பினும் கேளாத் தகையவே தம் புலனுக்கேற்ப ஓசையொலிகளைக் கேட்குமாயினும் செவிடாந் தன்மையனவே.
ஐம்பொறிகளின் சிறந்த பயன் அறிவுப்பேறாதலின், கேள்வியறி விற்கேற்காத செவிகள் 'கேளாத்தகைய' என்றும், கேள்வியறிவு புகுதற்கு இயற்கைத்துளையினும் வேறான நுண்டுளை வேண்டியிருத்தலின், 'கேள்வியால் தோட்கப்படாத செவி' என்றும், கூறினார். ஏகாரம் தேற்றம்.
கலைஞர் உரை:
இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை
நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே
கூறப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(காதுகளால் அடையக்கூடிய பயன் கேள்வி ஞானந்தான். இல்லாவிடில்) கேள்வி யறிவுகள் அடிக்கடி புகுந்து அவற்றால் தொளைக்கப்படாத காதுகள் ஓசைகளைக் கேட்கக்கூடியனவாக இருந் தாலும் செவிட்டுக் காதுகளேயாகும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
கேள்வி ஞானத்தாலே துளைக்கப்படாத காதுகள் ஓசையினைக் கேட்பதாக இருந்தாலும் கேளாத- செவிடான தன்மை உடையனவே ஆகும்.
Translation
Where teaching hath not oped the learner's ear,
The man may listen, but he scarce can hear.
Explanation
The ear which has not been bored by instruction, although it hears, is deaf.
Transliteration
Ketpinung Kelaath Thakaiyave Kelviyaal
Thotkap Pataadha Sevi
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்