அட்டகத்தி படத்தில் "ஆடி போனா ஆவணி அவள் ஆளை மயக்கும் தாவணி" என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் கானா பாலா.
தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து வரும் கானா பாலாவுக்கு தற்போது "பாரீஸ் கார்னர்" என்ற படத்தின் மூலம் ஹீரோவாகும் சான்ஸ் கிடைத்துள்ளது.
சென்னை நகரத்தை அடிப்படையாக கொண்ட கதைகளத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தை, நினைத்தேன் வந்தாய், பிரியமானவளே, வசீகரா போன்ற படத்தை இயக்கிய செல்வபாரதி இயக்குகிறார். இந்த படத்தில் கானா பாலா பாரீஸ் கார்னரில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவராக நடிக்கிறாராம்.
|