மற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(எப்படியென்றால்) முறைப்படி நடந்து கொண்டு தர்ம நியாயம் தவறாமல் குடும்பம் நடத்துகிறவன் துறவுபூண்டு தவம் செய்கிறவர்களை விடப் பொறுப்பும் சகிப்புத் தன்மையும் உடையவன்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தவம் செய்வோரை நன்னெறியிலே நடத்திச் சென்று அறத்தினின்றும் நீங்காத இல்லறம், நோன்பு நோற்றுத் தவம் செய்வோரது நிலைமையையும் விடப் பெருமையினை உடையதாகும்.
Translation
Others it sets upon their way, itself from virtue ne'er declines; Than stern ascetics' pains such life domestic brighter shines.
Explanation
The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance.